கரூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் - ஈரோடு சாலை தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் கடந்த 20-ம் தேதி மதியம் 1 மணியளவில் மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த கும்பல், 2 வீடுகளின் கதவை உடைத்து பணம், கேமரா, ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.