புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் மோதலால் பதட்டம் நீடித்து வந்த நிலையில், தீர்த்த விழா அசம்பாவிதமின்றி நடந்து முடிந்தது. இக்கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த சித்திரைத் தேரோட்டத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.