பள்ளி, கல்லூரிகளின் சாதி பெயர்களை நீக்குவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை மார்ச் 6-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரிவிக்க ஒருவார கால அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.