திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடங்கப்பட்ட குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 அடி உயரமுள்ள 500 மரங்கள் நடப்பட்டன. பழவேற்காட்டில் ஏரி சூழல் மேம்படவும், அப்பகுதியில் வலசை பறவைகளின் எண்ணிக்கை உயரவும் எடமணி பகுதி மக்கள் எடுத்த முன்னெடுப்பு காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.