அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் குளிக்க சென்றவர் மாயமான நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டிலிருந்து சில தினங்கள் முன் சொந்த ஊர் திரும்பிய புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த நீதிபதி, அதேபகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக நீதிபதி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள், நண்பர்கள் அவரை தேடி கிடைக்காத நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.