அரியலூர் அருகே தவெக பெண் நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு மீண்டும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மதிக்கவில்லை என கூறி தவெகவில் இருந்து விலகிய கார்க்குடி காலனியை சேர்ந்த பிரியதர்ஷினி, மறுநாளே கட்சி நிர்வாகிகள் சமாதானம் பேசியதை அடுத்து மீண்டும் இணைந்தார்.