இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் அருகே மின்சார வினியோகம் வழங்கக்கோரி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோலியார்கோட்டை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக மின் தடை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது தடியடி நடத்தப்போவதாக போலீசார் எச்சரித்ததால்,ஆத்திரமடைந்த கிராமத்தினர், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.