தனியார் மூலம் 'மினி பஸ்' இயக்கும் முடிவை அரசு கைவிடவில்லை என்றால் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை கையில் வைத்துக் கொண்டு துறையையே தனியார் மயமாக்குவது அரசின் எண்ணமாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.