நாடு முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்ட பரிவார் டைரீஸ் நிறுவனத்திற்கு எதிரான அசல் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் குவிந்தனர். மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 7 ஆண்டுகள் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு முகாம்களை நடத்தி ஆவணங்களை சேகரித்து வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள். இந்த மோசடி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.