அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து விட்டதால் இனி கடுமையாக உழைக்க வேண்டும் என, திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிப் பணிகளில் பொறுப்புடன் பணியாற்றாத நிர்வாகிகள் திருந்திக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என கண்டிப்புடன் பேசினார்.