மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 6-ஆவது நாளான நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தனர். பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் புறப்பாடாகி மாசி வீதிகளில் வலம் வந்தனர். சாரல் மழை பெய்த நிலையிலும், சாலையின் இருபுறமும் நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.