கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா வரும் 24 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, நாய்கள் கண்காட்சி, சைக்கிள் போட்டி, படகு போட்டி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் அமர்த்த உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட இ டாய்லெட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.