தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருட முயன்ற போது கை உள்ளே மாட்டி கொண்டதால் விடிய, விடிய கோயிலிலேயே காத்திருந்த திருடனை போலீசார் கைது செய்தனர். நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உண்டியலில் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் திருட முயன்றார். இரவு நேரம் என்பதால் கை உண்டியலில் சிக்கிய நிலையில், விடிய, விடிய அங்கேயே காத்திருந்த தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.