தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி ஒசூரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது. விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரியுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த டைடல் பார்க்கை அமைக்க தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும் என்றும், அதிலிருந்து ஒரு மாதிரியை தமிழக அரசு இறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.