திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே அருகே மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தற்காலிக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 9 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக, காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பாஸ்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.