மதுரை கோவில் நகரம் குப்பை நகரமாக மாறி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். தேவகோட்டை நகராட்சியில் உள்ள வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு விசாரணைக்கு வந்த போது, நெடுஞ்சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டாலும் மதுரை மாநகராட்சி கண்டு கொள்வதே இல்லை என கண்டனம் தெரிவித்தது.