கிருஷ்ணகிரி அருகே 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் செய்து வைத்ததற்காக, அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமப்புற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருக்கும் குந்தாரப்பள்ளி அருகே உள்ள முருகன் கோவிலில் நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், அச்சிறுமி கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.