கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் தாயும் மகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திக்கணம்கோடு பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டாரஸ் லாரி, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது.