கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்காய் மாலையை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டன்னுக்கு 20 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யவும், கடந்த ஆண்டு வறட்சியின் போது பாதிக்கப்பட்ட மாமரங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.