சென்னை அடுத்த கோவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயிலில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேர் பரமாரிப்பு பணிகள்கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்த, அலங்கரிக்கபட்ட தேரில் சுந்தரேஸ்வரர் எழுந்தருளியதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.