திருப்பூர் மாவட்டம் ஜேபி நகரில் பூட்டியிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவத்தன்று குமரவேல் என்பவர் நடத்தி வரும் பனியன் வேஸ்ட் குடோனுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது குடோனில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.