கோவை மாவட்டம் அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிக்னலில் நின்று கொண்டிருந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்ததும் அவசரமாக காரை விட்டு அவர் கீழே இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீ பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்துள்ளது.