திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சண்முக விலாஸ் மண்டபம் எதிரே திட்டப்பணிகள் நடைபெற்று வருவதையடுத்து பக்தர்கள் வடக்கு பிரகாரம் வழியாக சென்று, கிழக்கு பிரகாரத்தில் புதிதாக கட்டப்பட்ட மண்டபத்தின் வழியாக செல்லும்படி தெரிவிக்கப் பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் கிழக்கு பிரகாரம் வழியாக சஷ்டி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசை வழியாக சென்று தரிசனம் செய்யலாம். கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.