காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாத முதல் செவ்வாய்கிழமையொட்டி வெகு விமர்சையாக வெள்ளி திருத்தேர் பவனி நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தடன் வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.