அடிப்படை வசதிகள் கோரி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி மாணவர்கள், முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் செய்து தராமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.