தென்காசி அருகே அரசு பேருந்து ஓட்டுநரை, அரசுகல்லூரி மாணவர்கள் தாக்கியதாக கூறி, திடீரென பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி வழியாக இயக்கிய அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஏறி பேருந்தின் படிக்கெட்டில் தொங்கியபடி சென்றதை தட்டிக்கேட்ட பேருந்து ஓட்டுநரை மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது.