தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக கூறினார்.