திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் அரசு பேருந்தில் டயர் வெடித்து கரும்புகை வந்ததால், பயணிகள் அலறியடித்து வெளியேறினர். திருப்பத்தூரில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்ற போது, அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்த நிலையில், ஓட்டுநர் வாகனத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார்.