சட்டம் ஒழுங்கு சீர்கேடான ஆட்சியை நடத்துவதில், முதலமைச்சர் ஸ்டாலின், தந்தை கருணாநிதியையே மிஞ்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், மக்களுக்காக ஆட்சியா? குற்றவாளிகளுக்காக ஆட்சியா என சந்தேகப்படும் வகையில், நாள்தோறும் பாலியல் குற்றங்களும், கொலை சம்பவங்களும் நடப்பதாக குற்றம்சாட்டினார். குற்றங்களை குறைக்க வேண்டிய அரசு, அவற்றை மறைக்க பார்ப்பதால், அதனை குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால், குற்றச்செயல்கள் கூடிக் கொண்டே போவதாக அவர் தெரிவித்தார்.