சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பிரான்மலை ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் பால் குடங்கள், கரும்பு கட்டுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ வடுக பைரவர் கோவிலின் சித்திரை ஜெயந்தன் பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், மேள தாளங்களுடன் முழங்க பால் குடங்கள், கரும்பு கட்டுகள், நாய் பொம்மைகளுடன் ஊர்வலமாக நடனமாடி வந்து வழிபாடு செய்தனர்.