கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி மரத்துக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் புடை சூழ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.