விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மந்தக்குமார சுவாமி திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுமார் 140 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டு, அங்கேயே சமைத்து பக்தர்களுக்கு சுடசுட கறிவிருந்து பரிமாறப்பட்டது.