நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் நடத்தியதில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோடியக்கரை பகுதிக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதோடு, கத்தி முனையில் மீனவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.