சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நெல்லையில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அதிகாலை சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.