தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் 2026 தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தவெக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவர் தலைமையில், 05.11.2025, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள் - மௌனம் கலைக்கும் விஜய், தவெகவினருக்கு முக்கிய நாள், சிறப்பு பொதுக்குழு வியூகம் என்ன? | TVKUpdate