திருப்பூர் அருகே, சொத்தை எழுதி வாங்கி கொண்டு தாய் - தந்தையை நிற்கதியாய் விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே போடிபட்டியை சேர்ந்த 98 வயதான சங்கரலிங்கமும், 78 வயதான அவரது மனைவி சரஸ்வதியும் நியாயம் வழங்க கோரி பதாகைகளை ஏந்தி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.