விருதாச்சலம் தெற்கு பகுதி வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் ஜெயக்குமார், தனது தாயின் மருத்துவ செலவிற்கு கூட பணம் தராததால், அவரை நேரில் சந்திக்க அவரது தாய் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயக்குமாருடன் அவரது பெண் தோழி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை தாய் என்றும் பார்க்காமல் ஜெயக்குமார் அடித்து கீழே தள்ளினார். ஜெயக்குமாருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி நான்கு குழந்தை உள்ள நிலையில், அலுவலக நேரத்தில் பெண் தோழியுடன் இருந்தது அவரது தாய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.