விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாமகவை 50 இடங்களில் வெற்றி பெற செய்வதற்காக, சமூக ஊடகங்களை சரியாக கையாண்டு பரப்புரை மேற்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.