சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக் கூடத்தை சுத்தம் செய்த பெண் ஒப்பந்த பணியாளர், முகத்தில் திராவகம் கொட்டியதில் படுகாயம் அடைந்தார். உடையரேந்தல் கிராமத்தை சேர்ந்த எஸ்தர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். ஆய்வுக்கூடத்தை சுத்தம் செய்த போது, கழிவறையை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை திராவக குடுவையில் ஊற்றியுள்ளார். அது வேதிவினை புரிந்து முகத்தில் திராவக வாயு தாக்கியதில், முகம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.