நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவில் சாலையில் உலா வந்த ஒற்றைக் கரடியால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.