ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த மூதாட்டி மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தோஷ் குமார் மற்றும் திலகாவை கைது செய்து, அவர்களிடம் இருந்து 95 வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.