கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாண்டா கிளாஸ் பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி விடியற்காலை வின்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய அதிபர் இருதயராஜ் சிறப்புப் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஆடல், பாடல் என உற்சாகம் கரைபுரண்டது.