திருவாரூர் அருகே பழுதான தொலைக்காட்சியை மாற்றி கொடுக்காத சாம்சங் நிறுவனத்திற்கு டிவி தொகையுடன் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் புலிவலத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கியுள்ளார். அதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி இருந்த நிலையில், 6 மாத காலத்திற்குள் டிவி பழுதானது. ஆனால் அதனை சரி செய்ய வாய்ப்பில்லை என்றும், டிவியை எடுத்துச் சொல்லுங்கள் எனவும், சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்தி, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் சாம்சங் டிவி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தார். இதனை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம், பந்து பட்டு டிவி உடைந்தது என்ற வாதத்தை டிவி நிறுவனம் உரிய எஸ்பெர்ட் ஆய்வு மூலம் நிரூபிக்கவில்லை, எனவே சாம்சங் டிவி நிறுவனம் கார்த்திக்கு அதே மாடல் புதிய டிவியை வழங்க வேண்டும், அதே மாடல் டிவி தற்போது இல்லாவிட்டால் டிவியின் விலையான 1,49,099 ரூபாயை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.