யுஜிசி பாடத்திட்டத்தில், ஆர் எஸ் எஸ் தலைவர்களின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மசோதா நகலை எரிக்க முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.