ஈரோடு மாவட்டத்தில் அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளை நடத்தி கடனுதவி செய்வதாக கூறி பல பேரிடம் 3 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை பெற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 5 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மானியத்துடன் ஒரு வட்சம் ரூபாய் கடன்வாங்கி தருவதாக கூறி, இவர்கள் பல பேரிடம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.