தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரபல ரவுடியின் மனைவி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் மனு அளித்துள்ளார். சுரண்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி அருளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீசார் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி காவல்துறையினரால் தனது கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார்.