கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் பல அடி உயரத்திற்கு அலைகள் மேலெழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அரபிக்கடல் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மீனவ கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. இந்நிலையில், தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.