புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியை சாலை தடுப்புக் கட்டையில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மெய் கண்ணுடையாள் ஆலய பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, காட்டுப்பட்டு பகுதியில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, போலீஸார் முறையாக பாதுகாப்பு வசதி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.