செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வருவாய் கோட்டாட்சியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, கிராம நிர்வாக பெண் உதவியாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சரப்பாக்கத்தில் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வரும் முத்துமாரி என்பவரை பார்க்க வரும் ஆண்கள் மதுபோதையில் வருவதாக கூறி கிராம நிர்வாக உதவியாளர் கீதா கோட்டாட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.