தொடர் மழை மற்றும் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தொடர்ந்து வந்த மழை காரணமாக, கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மழை குறைந்து வந்த நிலையில், அருவியில் நீர் வரத்து குறைந்த நிலையில், இரண்டு பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, மூன்று பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், அருவியில் உள்ள சிறுவர் பூங்காவில் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் விளையாடியும் மகிழ்கின்றனர். தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.